ஜா. பிராங்க்ளின் குமார்
Wednesday, September 23, 2015
பாதி/பாதி
அவன் அழைத்துப்போன கதை
அத்தனை குழைவு
அத்தனை ஈரம்
அத்தனை துர்நாற்றம்
அத்தனை ஆழம்
திடுக்கிட்டு விழிக்கையில்
கண்களின்
மேல்பாதி வனமும்
கீழ்பாதி புதைகுழியும்.
அத்தனை குழைவு
அத்தனை ஈரம்
அத்தனை துர்நாற்றம்
அத்தனை ஆழம்
திடுக்கிட்டு விழிக்கையில்
கண்களின்
மேல்பாதி வனமும்
கீழ்பாதி புதைகுழியும்.
சதுரங்களாலான நிலம்
யூதாஸ்களை கண்டுபிடித்து
கொலை செய்துவிட்டபோதிலும்,
கொலை செய்துவிட்டபோதிலும்,
புறாக்களை கிழித்து
வல்லூறுகளை கண்டறிந்தபோதும்,
வல்லூறுகளை கண்டறிந்தபோதும்,
நிழல்களின் இரட்டை நாக்குகளை
பிடுங்கி நசுக்கியபோதும்,
பிடுங்கி நசுக்கியபோதும்,
தீராது
இச்சதுரங்களாலான நிலம்.
இச்சதுரங்களாலான நிலம்.
Subscribe to:
Posts (Atom)